முக்கூடல் எஸ் எஸ் கே வி சாலா ஆரம்பப் பள்ளியில் இன்று ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது . விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் திரு. பிரான்சிஸ் முத்துராஜ் அவர்கள் வருகை புரிந்து பள்ளியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மரங்களை நட செய்து சிறப்பித்தார்கள் . மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுற்றுப்புற சூழலை வலியுறுத்தும் வகையிலும் தண்ணீர் சிக்கனத்தையும் , மழைநீர் சேமிப்பை வலியுறுத்தும் வகையிலும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுற்றுச்சூழலில் உள்ள மக்களுக்கும் தெரியும் வகையில் விழிப்புணர்வு பேரணி பள்ளியின் சார்பாக மாணவர்கள் வழிநடத்திச் சென்றனர் . பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment